இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதியில் பக்தி மாண்புகள்
Kannammal Sugumar
摘要
பக்திக்குரிய மொழியாகத் திகழும் தமிழ் மொழியின் கடவுள் முருகன். முருக வழிபாடு மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்றுவரை மிகப் பெரும் அளவில் வணங்கத்தக்கதாகி, கொண்டாடப்பட்டு வருகின்றது. முருகனின் அருள் பெற்ற அடியார்கள் அருவ (பக்தி) உணர்வை உருவத்தில் (மொழியில்) கொணரச் செய்ததன் விளைவாக எண்ணற்ற நூல்கள் தோன்றின. அவற்றுள் கி.வா.ஜகந்நாதன் அவர்களால் படைக்கப்பட்ட இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி எனும் நூலும் சிறப்பிற்குரியது. இந்நூலில் சுட்டப் பெறும் இரத்தினகிரியும் திருப்புகழில் சுட்டப்பெறும் ரத்னகிரியும் வேறு வேறாகும். கி.வா.ஜ அவர்கள் குறிப்பிடும் இரத்தினகிரி தவம் புரிபவர்கள் வாழ்கின்ற, கற்றவர்கள் போற்றும் தலமாக,பாவம் தீர்க்கும் பாலமுருகன் வீற்றிருந்து அருள்புரிகின்ற திருத்தலமாகும். இந்நூலாசிரியர் பாலமுருகனின் மீது காதல் வயப்பட்ட தலைவியாகி, காமனையும் காமுறச் செய்யும் அழகுடையவனாகிய முருகக் கடவுளின் அருட்பார்வைக்கு ஏங்கி நிற்பது, படிப்போரையும் ஏங்கி நிற்கச் செய்கிறது.
